Sunday, February 22, 2009

உடன்பிறப்பே துணிந்து வா !!!

இது என்ன கொடுமை! மைக் என்னும் நமது சகோதரன் கேள்வி கேட்கிறான் அதுவும் யாரை பார்த்து? கலைஞரை பார்த்து! அதையும் சகித்து கொண்டு நம் வலையுலகில் இருக்கும் கலைஞர் வழிவந்த உடன்பிறப்பு, சாலிசம்பர், லக்கிலுக்,அபிஅப்பா, எல்லோரும் இருக்க காரணம் என்ன? அதுவும் தலைவர் ஆஸ்பத்திரியிலே வலியால் துடிக்கும் போது இதற்கு பதில் சொல்லாமல் அப்படி என்ன அஞ்சலி பதிவை தயார் செய்து கொண்டிருக்கின்றீர்களா?

தலைவர் பலபேருக்கு தன்னை எதிர்த்த அத்தனை பேருக்கும் சமாதி கட்டிய வரலாறு உங்களுக்கு மறந்து விட்டதா? நீங்க விளக்க பதிவு போட்டால் உங்களை "கலைஞரின் அடிவருடி" என சொல்கின்றார்களா? ஆமாம் அது தானே உண்மை. அது போல அவர்கள் என்ன பொதுவான ஆசாமிகளா? நீ யாருக்குடா அடிவருடி என் திருப்பி கேட்க உங்களுக்கு தெரியாதா?

இல்லை யார் பூனைக்கு மணி கட்டுவது என யோசனையா? இதற்கும் மேல் உடன்பிறப்புகளே உங்களுக்கு சூடு சொரனை இருந்தால் அந்த மனநோயாளிகளுக்கு பதில் சொல்லுங்கள். இல்லை எனில் உங்கள் திமுக உறுப்பினர் அட்டையை உன் பொக்கிஷத்தை கூவத்தில் வீசி விட்டு கட்டுமரம் நோக்கி போய் எதாவது செய். ஆனால் திமுகவில் இருந்து கொண்டு கலைஞரை திட்டி உனக்கும் உன் பதிவுகளுக்கும் ஹிட் வாங்கி கொண்டிருக்காதே!

அவரின் நிலை என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும் படுக்கையில் படுத்து கொண்டு பாலம் திறந்து கொண்டு இருக்கின்றார். பார்த்த என் கண்ணில் ரத்தம் வருகின்றது. உனக்கு வரவில்லையா என் உடன்பிறப்பே!

நம்மை எதிர்த்து கேள்வி கேட்ட எவனையாவது நாம் விட்டு வைத்தது உண்டா? ஜனநாயக ரீதியில் எதிர்கொண்டு பதில் சொன்னதில்லையா? உனக்கு பயமா? எந்த காலத்தில் நீ பயந்தாய் சொல் உடன்பிறப்பே! இதோ நான் பூனைக்கு மணி கட்டுகிறேன்! நண்பர் மைக் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்!


1) தமிழகத்தில் உங்கள் வாக்கு வங்கி 10 சதவீதம் குறைந்ததிற்கு காரணம் காங்கிரஸ் என்று தெரிந்தும், இன்னும் ஏன் அதனுடன் கூட்டு வைத்துள்ளிர்களே ஏன்?

அய்யா, இது எங்கள் உள்நாட்டு விவகாரம், நீங்கள் ஏன் அதற்கு கவலை படுகின்றீர்! அப்படி கவலைப்பட்டால் கர்நாடககாரன் காவிரியில் தண்ணீர் தராத போதும், ஒக்கேனக்கல் பிரச்சனையின் போதும், கிருஷ்ணா நதிநீர் பிரச்சனையின் போதும் ஒரு குரல் கொடுத்ததுண்டா? கேட்டா அது உங்கள் உள் நாட்டு பிரச்சனை என்பீர்கள்! ஆகவே எங்களுக்கு தெரியும் எங்கள் தமிழன் எப்படி நிம்மதியாக வாழவேண்டும் வாழ வைக்க வேண்டும் என!



2) சகோதர யுத்தம் அப்படின்னா ஸ்டாலினுக்கு, அழகிரிக்கும் நடந்ததே அதுவா.

இல்லை மாத்தையாவுக்கும் பிரபாகரனுக்கும் நடந்ததே அது தான். உமாமகேஸ்வரனுக்கும் உங்கள் இயக்கத்துக்கும் நடந்ததே அதான். அமிர்தலிங்கம் vs பிரபாகரன் அதான், இப்படியாக பல சொல்லலாம். குடும்ப பிரச்சனைக்கும் சகோதர யுத்தத்துக்கும் வேறுபாடு உண்டு அய்யா!



3) அடுத்த முறை ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நினைப்பு கொஞ்சமாவது இருக்கிறதா?

ஏன் அது சம்மந்தமாக நீங்கள் எந்த விதத்தில் உதவி செய்வதாக உத்தேசம்?



4) ஒரு உண்மை தமிழன் சீமானை பிடிப்பதில் உள்ள உங்கள் வீரம், ஏன் தமிழின அழிவை காப்பதில் இல்லை?

யார் சொன்னது உணர்சிபூர்வ முடிவெடுப்பது தமிழன் வேலை இல்லை அறிவு பூர்வமாக முடிவெடுப்பது தான் எங்கள் நோக்கம். தமிழின அழிவுக்கு காரணமே நீங்கள் தான் என நாங்கள் வயிறு எரிந்து கொண்டு இருக்கின்றோம். எங்கள் மீது அனாவசியமாக பழி சுமத்த வேண்டாம்.



5) ஒரு வேளை ஜெ. நேருக்கு, நேர் சந்தித்தால் என்ன பேசி கொள்வீர்கள்(2 பேரும் ஒன்னுதான், நீ தமிழனுக்கு எதிரி, நான் துரோகி சிங்கா,சிங்கிச்ச்சா அப்படின்னு ஒரு கோலாட்டம் ஆடுவிங்களா)

உங்கள் நக்கல் சிரிக்கும் படி இல்லை. நாங்கள் ஏன் செயலலிதாவை சந்திக்க வேண்டும்? உங்களையே கடைசி வரை நம்பி இருந்த மக்களை மூளை சலவை செய்து கேடயமாக நாங்களா பயன் படுத்துகின்றோம். அப்படி பார்த்தால் யார் துரோகி?


6) முத்துகுமாரின் தியாகத்தை கொச்சை படுத்த எப்படி உங்களால் முடிகிறது, மனசாட்சியை எங்கு அடகு வைத்திருக்கிர்கள்?

யார் கொச்சை படுத்தியது. இன்றைக்கு என் உடன்பிறப்பு எரிந்து செத்து போனான். ஆனால் அவன் அழகாக 4 வரியில் எழுதிய கடிதம் இன்னும் ரத்தம் வருகின்றது எங்கள் நெஞ்சில்! அவன் அவனுடைய தலைவனுக்கு எழுதின நான்கு வரி நறுக்குன்னு இருந்தது. யாரையாவது அதிலே குறை சொல்லியிருக்கானா? அவன் உணர்வை அழகாக சொல்லிவிட்டு போய்விட்டான் பாவிமகன்! எங்களுக்கு கொச்சை படுத்த வேண்டிய அவசியம் இல்லை யாரையும்!


7) திமுக குடும்ப அரசியல் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு தொடரும். இது மெகா, மெகா சீரியலா?

திமுக என்பது எங்கள் குடும்பம்.நாங்கள் உறுப்பினர்கள் இருக்கும் வரை வாழையடி வாழையாக தொடரும் பல ஆயிரம் ஆண்டுகள்.


8) தமிழர்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுகணக்கில் ஈழத்தில் இலங்கை அரசின் வன்முறையால் செத்து மடிவது, தெரியுமா?

நன்றாக தெரியும். அதன் காரணகர்த்தாக்கலையும் நன்றாக தெரியும்.தடுக்க நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் நீங்கள் தான் தடுப்பு சுவராக இருக்கின்றீர்கள்.


9) தமிழர்களை காக்க அரசியல் கட்சியாக நீங்கள் முயற்சி எடுப்பதை விட்டு, நீங்களே மக்களிடம் போய் நியாயம் கேட்கிறிர்கள், இது என்ன நியாயம் கலைஞர் சார். மக்கள் எல்லாம் தெளிவாத்தான் இருக்காங்க. நீங்கள் தெளிவு அடைவது எப்போது.?

நாங்கள் தெளிவாகத்தான் இருக்கின்றோம். இதில் உள்ள சில விஷயங்களை நாங்கள் உங்களிடம் விளக்க தேவை இல்லை.


10) தமிழர்களின் மேல் எப்போது வெறுப்பு வரத்துவங்கியது?

தவறு. நீங்கள் உங்கள் தலைமையிடம் கேட்க வேண்டிய கேள்வி இது!

Friday, January 30, 2009

ஏண்டா எழவு கூட்டுறீங்க!!!

ஏண்டா எழவு கூட்டுறீங்க! அந்த முத்துகுமாரோ எவனோ தன் தாய் தந்தையை கூட மதிக்காம குடும்பம்ன்னா என்னன்னு தெரியாத நாய்! செத்த பிணம் கூட அவன் அம்மா அப்பா ஊர் போகவில்லை. அவன் சொந்த பிரச்சனை என்னன்னே தெரிய வில்லை. இன்னும் 1 வாரம் ஆகும் அதல்லாம் தெரிய.

அவன் எழுதி ஏதாவது பத்திரிக்கையிலே ஏதாவது கட்டுரை வந்ததா! இல்லை தனியா ஏதாவது வலைப்பூ இருக்கா! அவன் வேலை பார்த்தது ஒரு பத்திரிக்கை ஆபீஸ். அதுவும் மருத்துவர் கொய்யாவோட பொண்ணு ஆபீஸ்ல.

அவன் தன் கடைசி அறிக்கை (அது என்னடா ஆளாளுக்கு அறிக்கை விட ஆரம்பிசுட்டீங்க) அதிலே கூட மருத்துவர் கொய்யா பத்தி ஏதும் இல்லை, திருமாவளவன் பத்தி ஏதும் இல்லை, வீரமணி பத்தி ஏதும் இல்லை, அனாதை ஆனந்தன் சைக்கோ பத்தி ஏதும் இல்லை, நெடுமரம் பத்தி இல்லை, ஆனா குறிப்பா கலைஞரை பத்தி இருக்கு.

எலேய் எலேய் எவன ஏமாத்த பாக்குறீங்க! நீங்களே கூடி கூடி பேசிகிறீங்க, என்னன்னவோ திடீர் திடீர்ன்னு முடிவெடுத்துட்டு பேப்பர்க்கு போஸ் கொடுக்குறீங்க.

இப்ப பார்த்தா எல்லாரும் எழவு ஊட்டுக்கு போய் தீவாளி கொண்டாடிகிட்டு இருக்கீங்க. எல்லாருக்கும் ஒரு சந்தேகம்டா, நீங்க எவனாவது தான் இந்த அனாதை முத்துவை எரிச்சிடீங்களோன்னு.

முத்துகுமார் செத்தது(அதாவது தானா செத்திருந்தா) அது ஒரு கோழை செய்யும் வேலை. ஏன்னா அவன் இத்தனை வயது வரை வாழ்ந்த போது அவன் வார்டிலே ஒரு நாள் குப்பை கூட்டி இருப்பானா?

அவன் பிறந்த தமிழகத்துக்கு இது வரை அவன் செஞ்ச நல்லது என்ன? நல்லது செய்ய வேண்டாம், அட்லீஸ்ட் ஆதங்க ப்பட்டுஎங்கயாவது ஒரு கட்டுரை எழுதியிருக்கானா?


போங்கடா போங்கடா கலைஞரை திட்ட அடுத்த வழியை பாருங்க! சைக்கோவை போட்டு எரிங்க! இன்னும் திட்ட நல்ல வழி கிடைக்கும்!

Friday, January 9, 2009

கிளிநொச்சி வீழ்ந்தது ஒரு துன்பியல் சம்பவம்!!!

1992 இரண்டு கட்ட தேர்தல் நடக்கின்றது நம் தமிழ்நாட்டில்! அது வாழ்வோ சாவோ போராட்டம் தமிழனுக்கு, ஏனனில் MGR இல்லை அப்போது. அவர் இல்லா ஒரு தேர்தல். அவர் இருந்து ஒரு தேர்தல் நடந்தால் அது வேறு. ஆனால் அப்போதோ கலைஞரோ, செயலிதாவோ என்கிற நிலை. செயலலிதா வந்துவிட்டால் என்ன ஆகும் தமிழகமே சுடுகாடாகும் நிலை! அந்த நேரத்தில் கொல்லப்படுவது ராஜீவ்!

விளைவு 1992-96 அராஜக ஆட்சி! ஒரு இருண்ட ஆட்சி தமிழகத்தில்!சசிகலாவின் ஆட்சி! அதை விவரிக்க நான் இங்கே வரவில்லை!

ஆக தமிழகத்தில் அப்போது ஜெயலாலிதாவின் ஆட்சியை கொண்டு வந்தது புலிகள்!

அதன் பிறகு எத்தனையோ கஷ்டப்பட்டு திரும்பவும் ஆட்சிக்கு வரவேண்டிய நிலை!

அதல்லாம் போகட்டும், இன்றைய நிலையில்................

புலிகள் ஒவ்வொறு இடமாக இழந்து கொண்டிருப்பது மிகவும் வருந்த தக்க நிகழ்வு! காரணம் அடிப்படையாக என்ன? அன்று அந்த கோர கொலை நடந்ததுதானே!

இந்தியாவும் இப்போது கண்டு கொள்ள வில்லை! கலைஞரும் கண்டு கொள்ளவில்லை என்று குமுறும் முன்னே கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டியது தானே!

அன்றைக்கு தன் பிறந்த நாள் வசூல் தொகை கொடுத்த கலைஞர் வேண்டாம்.ஆனால் இன்று கலைஞர் வேண்டும் என்றால் புலிகளே என்ன அர்த்தம். ஆக பதவியில் இருப்பவர் ஆதரவு உங்களுக்கு வேண்டும் என்று தானே!

அதனால் தானே "பதவி" என்கிற விஷயம் வேண்டிகிடக்கு எல்லோருக்கும். இதே கலைஞர் எதிர் கட்சியாக இருந்தால் இத்தனை முக்கியத்துவம் கொடுத்து இருப்பீர்களா நீங்கள்?

உங்கள் வலைகுஞ்சுகள் எத்தனை எத்தனை கீழ்த்தரமாக கலைஞரை அவரின் வயதையும் பாராமல் திட்டி தீர்க்கின்றன! அது எந்த அளவு உங்களை உங்கள் அரசியலை பாதிக்கும் என உங்களுக்கு தெரியும் அல்லவா? அநியாயமாக இந்திய அரசியல் கொலை செய்ததினால், செய்துவிட்டு சும்மா இருந்திருக்கலாம் அதனை "இது ஒரு துன்பியல் சம்பவம்" என சொல்லி மேலும் இந்தியன் மனதில் எரியும் நெருப்பில் நெருப்பை அள்ளி கொட்டினீர்களே, அதை கூட விட்டு விடலாம். ஆனால் இப்போது கலைஞரை திட்டி தீர்ப்பது எந்த விதத்தில் நியாயம். ஆக இதை எல்லாம் சரி செய்ய முடிவது கலைஞர் என மட்டுமே ஏன் நீங்க எல்லாரும் நினைக்கிறீர்கள் அதனால் தான் அந்த திட்டு திட்டுகிறீர்கள்.

எல்லோருமே திட்டுவது கலைஞர் பதவி ஆசை பட்டவர் என்பதை தானே! அதிலும் ஒரு பதிவர் "பிஜேபிக்கு ஓட்டு போட விளம்பரம் கொடுத்தாரே! சரியென்றே வைத்து கொள்வோம்! சரி இந்தியாவுக்கு என்ன கோவம் "தான் தேடப்படும் குற்றவாளிக்கு அந்த தமிழீழ தலைவர் பதவி கிடைக்க கூடாது" என்பதாகத்தானே இருக்கும். அதனால் "தமிழீழம்" மட்டுமே தனது கொள்கை என இருக்கும் தலைவர் ஏன் "நான் இந்திய விசாரனைக்கு கட்டுபடுகிறேன்!அங்கே வந்து சரணடைகிறேன், ஆனால் அதற்கு முன் ஒரே நிபந்தனை, எனக்கு நான் சரணடையும் தேதியும் தமிழீழம் உண்டாகும் தேதியும் ஒரே நாளாக இருக்க வேண்டும்" என ஏன் அறிவிக்க கூடாது??? அப்போது ஒத்து கொள்கிறோம் "பதவி" என்கிற வார்த்தைக்கு உள்ள சக்தியை பற்றி.

இந்திய அமைதிப்படை உள்ளே நுழைந்த சம்பவம் பற்றியும் அப்போது புலிகள் ஆயுதங்கள் ஒப்படைத்ததும் பற்றி தனியாக விவாதிக்கலாம். அப்போது கூட தி.மு.க அதை ஆதரிக்கவில்லை. அந்த படை திரும்பிய போது வரவேற்கவில்லை என்பதும் உண்மை!


ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எங்கள் சகோதரர்கள் என்பது அடுத்த விஷயம். இந்தியா என்பது எங்கள் தாய் என்பது முதல் விஷயம்! எங்கள் இந்திய தலைவன் பரிதாபமாக செத்த போது நீங்கள் சொன்ன வார்த்தை தான் இப்போது சொல்ல முடிகின்றது எங்களாலும் "கிளி நொச்சி இழப்பு என்பது ஒரு துன்பியல் சம்பவம்" என்று!

Wednesday, February 20, 2008

ஒரு திருமண அறிவிப்பு!!!



நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தனது 60 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்த ஜெயலலிதா நேற்று மாலை திருக்கடையூர் வந்தார்.

தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரும் 24ம் தேதி 60 வது பிறந்த நாள். அவரது நட்சத்திரத்தின் படி நேற்று இரவு பிறந்த நாள். இதற்காக, அவரது தோழி சசிகலாவுடன் நேற்று மதியம் 1.30 மணிக்கு சென்னையி இருந்து கார் மூலம் புறப்பட்டவர் நேற்று மாலை 6.30 மணிக்கு திருக்கடையூர் அருகே உள்ள பிள்ளை பெருமாள் ‘எல் அண்ட் டி’ விருந்தினர் மாளிகைக்கு வந்தார். ஒரு மணி நேர ஓய்வுக்கு பின் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் வாசலில் கணேச குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர். சிவாச்சாரியார்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த பூமாலையை சசிகலாவுக்கும், சசிகலாவுக்கு அளித்த பூ மாலையை ஜெயலலிதாவும் அணிந்து கொண்டனர். சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், மகாதேவன் தவிர கட்சி நிர்வாகிகள் உட்பட அனைவருக்கும் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று இரவு 7.45 மணிக்கு கோவிலுக்கு வந்த ஜெயலலிதா இரவு 8.45 மணி வரை கோவிலில் இருந்தார். ஒரு மணி நேரத்துக்கு பிறகு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்று தங்கினார்.
நன்றி: தினமலர்
திஸ்கி: தங்கத்தாரகை பற்றிய மேல் விவரங்களுக்கு இங்கே அமுக்கவும்.

Friday, October 5, 2007

ஞானி என்னும் சாணி!!!

மகாபாவி! நீ இதுக்கும் சொல்வாய் விளக்கம், சாணி என்பது அப்புடி இப்புடின்னு நான் அங்கே வரவில்லை! என்ன தைரியம் உனக்கு! சாயந்திரம் 7 ஆச்சுன்னா தண்ணி அடிச்சுட்டு கெக்கே பெக்கேன்னு உளறி அதை எழுத்தாக்கி வித்து வ்யிறு வளர்க்கும் நாயே ஞானி ராஸ்கல், என்ன தைரியம்! அவர் வேட்டி நனைச்சார் மயிறு நனைச்சார்ன்ன்னு சொல்ல உனக்கு! தன்னை எதிர்த்தவன் எல்லாருக்கும் சமாதி கட்டின தலைவனை பார்த்து நீ உதிர்க்கும் வார்த்தை உன் வருங்காலம் எப்படி என முகமதுஅலி, குத்து குமரன் ஆகியோர்களை போய் கேள்! ராஸ்கல் 18 மணி நேரம் உழைக்கும் ஒரு கிழவனை மாலை 7 மணிக்கு தண்ணியடிச்சுட்டு படுக்கும் நாதாறி உளரும் வார்த்தைகளை ஆ.வி என்னும் மஞ்சள் பத்திரிக்கை வெளியிடுவது ஒரு கண்டணத்துக்கு உரிய செயல், அதற்க்கு வருத்தம் கேட்டே ஆக வேண்டும் ஆ.வி,

Tuesday, July 31, 2007

தி.மு.க வின் தலைவராக தயாநிதிக்கு முழு தகுதி உண்டு!!!

சொந்தமாகவே அறுவை சிகிச்சை செய்யும் ஒரு முயற்சி இது!


கலைஞருக்கு பின்பு திமுகவின் நிலை என்னவாக இருக்கும், யார் தலைமைக்கு சரியான ஆள் ஸ்டாலினா, அழகிரியா, கனிமொழியா, துரைமுருகனா, பொன்முடியா என்றெல்லாம் ஆராயும் முன்பாக கலைஞர் குடும்ப உருப்பினருக்கா அல்லது வெளியாருக்கா என பாத்தோமானால் கண்டிப்பாக கலைஞர் குடும்ப ஆட்களுக்கே தலைமை பதவி என்பது வெட்ட வெளிச்சம். கலைஞர் "இதென்ன காஞ்சி மடமா ஜனநாயக முறையில் தான் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்றி அடிக்கடி சொல்வது போல இல்லை நிலமை. அப்படியெனில் யார் தகுதியான ஆள் என ஆராயும் முன்பாக நாம் கலைஞர் - மாறன் இவர்களை ஒப்பீடு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


மாறன் தன் கடைசி மூச்சு வரை திராவிடத்தில் இருந்து பின்வாங்கவேயில்லை. ஆனால் கலைஞர் மஞ்சள் துண்டு விஷயம் வரை இன்னும் பல சர்ச்சைகளை வைத்துகொண்டுதானிருக்கிறார். ஜாதீய வட்டம் என்று பார்த்தால் அதிலும் மாறனுக்கு தான் முதலிடம். தன் மகன் கலாநிதிக்கு கர்நாடகாவை சேர்ந்த கௌடா இனத்தை சேர்ந்த பெண்ணை மருமகளாக்கினார். தயாநிதிக்கோ பிராமண இனத்தில் பெண் எடுத்தார். மகள் அன்புகரசிக்கோ ஒரு படி மேலே போய் இஸ்லாமிய மருமகனை தேர்ந்தெடுத்தார்.


ஆனால் கலைஞரோ தன் பிள்ளைகளுக்கு மு.க.முத்துக்கு தன் இனமான இசைவேளாளர் சமூகத்திலே பெண் எடுத்தார். அதுபோல ஸ்டாலினுக்கும், தமிழரசுவுக்கும். மகள் செல்விக்கும் தன் சாதியிலேயே தேடி கொடுத்தார். அது தான் போகட்டும் என்றால் தன் மூண்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள் நாடார் இனம் என்பதால் நாடார் பையன் தான் தன் பெண்ணுக்கு வேண்டும் என ராஜாத்தி அம்மாளின் பிடிவாதமான விருப்பத்தை மகிழ்வோடு நிறைவேற்றினார். அதற்காகவே அப்போது அதிமுக வில் இருந்த ஆலடி அருணாவை திமுகவுக்கு கொண்டு வந்து அவரை விட்டு அதிபன் போஸ் என்ற் மாபெறும் பணக்கார நாடார் மாப்பிள்ளையை தன் மகள் கனிமொழிக்கு திருமணம் ம்உடித்து வைத்தார். ஆலடி அருணாவின் பணியை மெச்சி அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். ஆனால் ஒரு MP சீட் தரவில்லை என்பதற்காக கலைஞர் முகத்திலே கரி பூசினார் ஆலடி அருணா. ஆனாலும் ராஜாத்தி அம்மாளின் நாடார் பற்று இப்போது அருணாவின் மகள் பூங்கோதையை அமைச்சராக ஆக்கியிருக்கிறது. தவறி போய் மு.க அழகிரி மாத்திரம் ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அதன் பின்புலம் என்னவென்று தெரியவில்லை! ஆக சாதீய வட்டத்தில் கூட மாறனே கலைஞரை விட உயரத்தில் இருக்கிறார்.


சரி இருவரின் வாரிசுகள் பற்றி ஒப்பிட்டோமானால், மாறன் அவர்களது மூத்த மகன் கலாநிதி MBA பட்டதாரி. அமரிக்காவில் படித்தவர். சும்மா ஒப்புக்கு படிக்காமல் தான் படித்தத்தன் பலன் வழியாக இன்று மீடியா உலகில் சக்கை போடு போட்டு கோடிகளில் வாழ்கிறார். தனக்கு தம் தொழிலில் யாருக்குமே ஈடாக இல்லாமல் மிக உயரத்தில் இருக்கிறார்.


தயாநிதி மாறன் BA மட்டுமே படித்திருந்தும் சில சர்ட்டிபிகேட் படிப்புகள் வெளி நாட்டில் படித்து இருந்தும் தன் அண்ணன் கலாநிதிக்கு துணையாக வியாபாரத்தில் இருந்தார். பின்பு அவருக்கான வாய்ப்பு வந்த போது ஒரு மத்திய மந்திரியாக 3 வருடங்கள் Talk of India வாக இருந்தார். 45000 கோடிகள் இவரால் இந்தியாவுக்கு லாபம்.


மகள் அன்புக்கரசியோ மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். பின்பு ராமச்சந்திராவிலும் அப்பல்லோவிலும் பணியாற்றி இப்போது அமரிக்காவில் பணியாற்றுகிறார்.


இப்படியாக மாறன் அவர்களின் வாரிசுகள் இண்டலக்சுவல் பிரிவின் கீழ் வருகின்றனர். அது போல் அவர்களது தனிமனித ஒழுக்கமும் அருமையானது. ஆனால் கலைஞரின் வாரிசுகள் எப்படி என்று பார்த்தால் மு.க முத்து ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்க்கு உதாரணம். அவருக்கு வாய்ப்புகள் தாராளமாக வழங்கப்பட்டது. ஆனால் எதையுமே அவர் பயன் படுத்திக்க முன்வரவில்லை. அடுத்து அவருக்கு மிகவும் பிடித்த அவரின் தம்பி மு.க அழகிரி ஒரு நொட்டோரியஸ் ஆக பிரபலமாகி இருக்கிறார். அவரும் கல்லூரியில் கால் வைக்கவில்லை. மு.க. தமிழரசுன்னு ஒருத்தர் இருப்பதே யாருக்கும் தெரியாது. கலைஞரின் சட்ட மன்ற உருப்பினர் அலுவலகத்தில் சும்மா உட்காந்து இருப்பார். மத்தபடி பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல. ஆனா மகள் செல்வி மட்டுமே கலைஞரின் சரியான வாரிசுன்னு சொல்லனும். அவருடைய புத்திசாலித்தனம் செல்விக்கு மட்டுமே உண்டு. ஆனாலும் செல்வியும் செல்வத்தின்(முரசொலி மாறன் அவர்களின் தம்பி)கரம் பிடித்ததால் செல்வியின் புத்திசாலிதனங்கள் மாறன் குடும்பத்துக்கே போகின்றது.


தளபதி மு.க ஸ்டாலின் தத்திகுத்தி BA படித்திருந்தாலும் அவருடைய இளமை காலத்தில் கொஞ்சமும் சோபிக்கவில்லை. அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது மேயராக. அட பரவாயில்லியே தளபதியின் நிர்வாகம் என்று பாராட்ட வைத்தது. அப்போது கலைஞர் முதல்வராக இருந்தார். அதனால் சென்னை மாநகராட்சிக்கு போதுமான ஆதரவு இருந்தது தமிழக அரசிடம் இருந்து. ஆனால் ஜெயலலிதா ஆட்சியின் போது தளபதியால் மேயராக சுத்தமாக செயல்படவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் மேயர் பதவியே பறி போனது. அதனால் விளங்குவது என்னவெனில் ராஜா வீட்டு கண்ணுகுட்டியா இருந்தா செயல்படுவேன் இல்லாவிடில் என்னால முடியாதுன்னு அர்த்தமா? கனிமொழி ஆஹா ஓஹோன்னு சொல்லிகிறாங்க. ஆங்கில அறிவும் சரி புரியாத கவிதை எழுதும் திறனும் சரி, சும்மா பெண்ணீயம் பேசுவதும் சரி ஆனா எப்போ புருஷன் வீட்டுல ஒரு மருமகளா நடந்துக்க போறாங்கன்னு தெரியலை. தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஏதாவது ஒரு சாதியை சார்ந்தே இருக்கின்றன. ஆனால் திமுகவுக்கு மட்டும் அந்த கெட்ட பெயர் இதுவரை இல்லை. கனிமொழியின் அரசியல் பிரவேசம் அந்த நல்ல பெயரை அநேகமாக கெடுக்கலாம்.


ஆக அடுத்த தலைமை என்னும் போட்டிக்கு இருப்பது தளபதியும் தயாநிதி மாறனும் மாத்திரமே. சரி இந்த இருவரில் யார் என பார்த்தால்.....


வைகோவுக்கும் தளபதிக்கும் பிரச்சனை ஏற்பட்டு பின் வைகோ விலகிய போது மேடைக்கு மேடை தளபதியை விமர்சித்த போது தளபதி அதை சரியான கோணத்தில் எதிர்க்காமல் எதிர்க தெரியாமல் மற்ற இரண்டாம் கட்ட தலைவர்களே தளபதியை காப்பாற்ற வேண்டி இருந்தது. ஆனால் தயாநிதியோ கடந்த தேர்தல் சமயத்தில் வைகோ வை ஒரு காமடியனாக ஆக்கி இனி அரசியல் எதிர்காலமே வைகோவிற்கு இல்லாமல் செய்து சாதனை படைத்தார். டாடாவை மிரட்டுகிறார் என வைகோ சொன்னதுமே அவர் மேல் வழக்கு தொடர்கிறார். டாடாவை தன்வீட்டுக்கு வரவழைத்து பேசி வைகோ முகத்திலே கரி பூசுகிறார்.


தனக்கு மத்திய மந்திரி பதவி கிடைத்ததும் தன்னை விட மூத்த அமைச்சரான TR பாலு, இராசா போன்றவர்களை சுலபமாக பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு அலட்சியமாக வந்து அமர்ந்தார். நெடுஞ்செழியன்/சம்பத்/மதியழகனை பின்னுக்கு தள்ளி கலைஞர் வந்து முதல் இடத்துக்கு வந்த அதே திறமை தயாநிதிக்கு இருந்தது. ஆனால் தளபதிக்கு துரைமுருகனை பின்னுக்கு தள்ளுவதே ரொம்ப சிரமமாக இருக்கின்றது.


ஆக கட்சியின் நன்மை கருதி தயாநிதியை மீண்டும் கட்சியில் பழைய நிலைக்கு கொண்டு வந்து கட்சியை பாதுகாக்க வேண்டும்! இது கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் கருத்து! (ரொம்ப பேராசை தொண்டர்களா இருக்காங்கப்பா!

Monday, July 30, 2007

சோதனைப் பதிவு

என்னடா சவுண்டு ஜாஸ்தியா இருக்குதேன்னு
பாக்கரீங்களா?
நான் விஷயமுள்ளவன் ஆனா
விஷமுள்ளவன் இல்லீங்கோ
படிச்சுப் பாருங்கோ
புடிச்சி போகுமுங்கோ