Tuesday, July 31, 2007

தி.மு.க வின் தலைவராக தயாநிதிக்கு முழு தகுதி உண்டு!!!

சொந்தமாகவே அறுவை சிகிச்சை செய்யும் ஒரு முயற்சி இது!


கலைஞருக்கு பின்பு திமுகவின் நிலை என்னவாக இருக்கும், யார் தலைமைக்கு சரியான ஆள் ஸ்டாலினா, அழகிரியா, கனிமொழியா, துரைமுருகனா, பொன்முடியா என்றெல்லாம் ஆராயும் முன்பாக கலைஞர் குடும்ப உருப்பினருக்கா அல்லது வெளியாருக்கா என பாத்தோமானால் கண்டிப்பாக கலைஞர் குடும்ப ஆட்களுக்கே தலைமை பதவி என்பது வெட்ட வெளிச்சம். கலைஞர் "இதென்ன காஞ்சி மடமா ஜனநாயக முறையில் தான் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்றி அடிக்கடி சொல்வது போல இல்லை நிலமை. அப்படியெனில் யார் தகுதியான ஆள் என ஆராயும் முன்பாக நாம் கலைஞர் - மாறன் இவர்களை ஒப்பீடு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


மாறன் தன் கடைசி மூச்சு வரை திராவிடத்தில் இருந்து பின்வாங்கவேயில்லை. ஆனால் கலைஞர் மஞ்சள் துண்டு விஷயம் வரை இன்னும் பல சர்ச்சைகளை வைத்துகொண்டுதானிருக்கிறார். ஜாதீய வட்டம் என்று பார்த்தால் அதிலும் மாறனுக்கு தான் முதலிடம். தன் மகன் கலாநிதிக்கு கர்நாடகாவை சேர்ந்த கௌடா இனத்தை சேர்ந்த பெண்ணை மருமகளாக்கினார். தயாநிதிக்கோ பிராமண இனத்தில் பெண் எடுத்தார். மகள் அன்புகரசிக்கோ ஒரு படி மேலே போய் இஸ்லாமிய மருமகனை தேர்ந்தெடுத்தார்.


ஆனால் கலைஞரோ தன் பிள்ளைகளுக்கு மு.க.முத்துக்கு தன் இனமான இசைவேளாளர் சமூகத்திலே பெண் எடுத்தார். அதுபோல ஸ்டாலினுக்கும், தமிழரசுவுக்கும். மகள் செல்விக்கும் தன் சாதியிலேயே தேடி கொடுத்தார். அது தான் போகட்டும் என்றால் தன் மூண்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள் நாடார் இனம் என்பதால் நாடார் பையன் தான் தன் பெண்ணுக்கு வேண்டும் என ராஜாத்தி அம்மாளின் பிடிவாதமான விருப்பத்தை மகிழ்வோடு நிறைவேற்றினார். அதற்காகவே அப்போது அதிமுக வில் இருந்த ஆலடி அருணாவை திமுகவுக்கு கொண்டு வந்து அவரை விட்டு அதிபன் போஸ் என்ற் மாபெறும் பணக்கார நாடார் மாப்பிள்ளையை தன் மகள் கனிமொழிக்கு திருமணம் ம்உடித்து வைத்தார். ஆலடி அருணாவின் பணியை மெச்சி அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். ஆனால் ஒரு MP சீட் தரவில்லை என்பதற்காக கலைஞர் முகத்திலே கரி பூசினார் ஆலடி அருணா. ஆனாலும் ராஜாத்தி அம்மாளின் நாடார் பற்று இப்போது அருணாவின் மகள் பூங்கோதையை அமைச்சராக ஆக்கியிருக்கிறது. தவறி போய் மு.க அழகிரி மாத்திரம் ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அதன் பின்புலம் என்னவென்று தெரியவில்லை! ஆக சாதீய வட்டத்தில் கூட மாறனே கலைஞரை விட உயரத்தில் இருக்கிறார்.


சரி இருவரின் வாரிசுகள் பற்றி ஒப்பிட்டோமானால், மாறன் அவர்களது மூத்த மகன் கலாநிதி MBA பட்டதாரி. அமரிக்காவில் படித்தவர். சும்மா ஒப்புக்கு படிக்காமல் தான் படித்தத்தன் பலன் வழியாக இன்று மீடியா உலகில் சக்கை போடு போட்டு கோடிகளில் வாழ்கிறார். தனக்கு தம் தொழிலில் யாருக்குமே ஈடாக இல்லாமல் மிக உயரத்தில் இருக்கிறார்.


தயாநிதி மாறன் BA மட்டுமே படித்திருந்தும் சில சர்ட்டிபிகேட் படிப்புகள் வெளி நாட்டில் படித்து இருந்தும் தன் அண்ணன் கலாநிதிக்கு துணையாக வியாபாரத்தில் இருந்தார். பின்பு அவருக்கான வாய்ப்பு வந்த போது ஒரு மத்திய மந்திரியாக 3 வருடங்கள் Talk of India வாக இருந்தார். 45000 கோடிகள் இவரால் இந்தியாவுக்கு லாபம்.


மகள் அன்புக்கரசியோ மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். பின்பு ராமச்சந்திராவிலும் அப்பல்லோவிலும் பணியாற்றி இப்போது அமரிக்காவில் பணியாற்றுகிறார்.


இப்படியாக மாறன் அவர்களின் வாரிசுகள் இண்டலக்சுவல் பிரிவின் கீழ் வருகின்றனர். அது போல் அவர்களது தனிமனித ஒழுக்கமும் அருமையானது. ஆனால் கலைஞரின் வாரிசுகள் எப்படி என்று பார்த்தால் மு.க முத்து ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்க்கு உதாரணம். அவருக்கு வாய்ப்புகள் தாராளமாக வழங்கப்பட்டது. ஆனால் எதையுமே அவர் பயன் படுத்திக்க முன்வரவில்லை. அடுத்து அவருக்கு மிகவும் பிடித்த அவரின் தம்பி மு.க அழகிரி ஒரு நொட்டோரியஸ் ஆக பிரபலமாகி இருக்கிறார். அவரும் கல்லூரியில் கால் வைக்கவில்லை. மு.க. தமிழரசுன்னு ஒருத்தர் இருப்பதே யாருக்கும் தெரியாது. கலைஞரின் சட்ட மன்ற உருப்பினர் அலுவலகத்தில் சும்மா உட்காந்து இருப்பார். மத்தபடி பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல. ஆனா மகள் செல்வி மட்டுமே கலைஞரின் சரியான வாரிசுன்னு சொல்லனும். அவருடைய புத்திசாலித்தனம் செல்விக்கு மட்டுமே உண்டு. ஆனாலும் செல்வியும் செல்வத்தின்(முரசொலி மாறன் அவர்களின் தம்பி)கரம் பிடித்ததால் செல்வியின் புத்திசாலிதனங்கள் மாறன் குடும்பத்துக்கே போகின்றது.


தளபதி மு.க ஸ்டாலின் தத்திகுத்தி BA படித்திருந்தாலும் அவருடைய இளமை காலத்தில் கொஞ்சமும் சோபிக்கவில்லை. அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது மேயராக. அட பரவாயில்லியே தளபதியின் நிர்வாகம் என்று பாராட்ட வைத்தது. அப்போது கலைஞர் முதல்வராக இருந்தார். அதனால் சென்னை மாநகராட்சிக்கு போதுமான ஆதரவு இருந்தது தமிழக அரசிடம் இருந்து. ஆனால் ஜெயலலிதா ஆட்சியின் போது தளபதியால் மேயராக சுத்தமாக செயல்படவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் மேயர் பதவியே பறி போனது. அதனால் விளங்குவது என்னவெனில் ராஜா வீட்டு கண்ணுகுட்டியா இருந்தா செயல்படுவேன் இல்லாவிடில் என்னால முடியாதுன்னு அர்த்தமா? கனிமொழி ஆஹா ஓஹோன்னு சொல்லிகிறாங்க. ஆங்கில அறிவும் சரி புரியாத கவிதை எழுதும் திறனும் சரி, சும்மா பெண்ணீயம் பேசுவதும் சரி ஆனா எப்போ புருஷன் வீட்டுல ஒரு மருமகளா நடந்துக்க போறாங்கன்னு தெரியலை. தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஏதாவது ஒரு சாதியை சார்ந்தே இருக்கின்றன. ஆனால் திமுகவுக்கு மட்டும் அந்த கெட்ட பெயர் இதுவரை இல்லை. கனிமொழியின் அரசியல் பிரவேசம் அந்த நல்ல பெயரை அநேகமாக கெடுக்கலாம்.


ஆக அடுத்த தலைமை என்னும் போட்டிக்கு இருப்பது தளபதியும் தயாநிதி மாறனும் மாத்திரமே. சரி இந்த இருவரில் யார் என பார்த்தால்.....


வைகோவுக்கும் தளபதிக்கும் பிரச்சனை ஏற்பட்டு பின் வைகோ விலகிய போது மேடைக்கு மேடை தளபதியை விமர்சித்த போது தளபதி அதை சரியான கோணத்தில் எதிர்க்காமல் எதிர்க தெரியாமல் மற்ற இரண்டாம் கட்ட தலைவர்களே தளபதியை காப்பாற்ற வேண்டி இருந்தது. ஆனால் தயாநிதியோ கடந்த தேர்தல் சமயத்தில் வைகோ வை ஒரு காமடியனாக ஆக்கி இனி அரசியல் எதிர்காலமே வைகோவிற்கு இல்லாமல் செய்து சாதனை படைத்தார். டாடாவை மிரட்டுகிறார் என வைகோ சொன்னதுமே அவர் மேல் வழக்கு தொடர்கிறார். டாடாவை தன்வீட்டுக்கு வரவழைத்து பேசி வைகோ முகத்திலே கரி பூசுகிறார்.


தனக்கு மத்திய மந்திரி பதவி கிடைத்ததும் தன்னை விட மூத்த அமைச்சரான TR பாலு, இராசா போன்றவர்களை சுலபமாக பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு அலட்சியமாக வந்து அமர்ந்தார். நெடுஞ்செழியன்/சம்பத்/மதியழகனை பின்னுக்கு தள்ளி கலைஞர் வந்து முதல் இடத்துக்கு வந்த அதே திறமை தயாநிதிக்கு இருந்தது. ஆனால் தளபதிக்கு துரைமுருகனை பின்னுக்கு தள்ளுவதே ரொம்ப சிரமமாக இருக்கின்றது.


ஆக கட்சியின் நன்மை கருதி தயாநிதியை மீண்டும் கட்சியில் பழைய நிலைக்கு கொண்டு வந்து கட்சியை பாதுகாக்க வேண்டும்! இது கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் கருத்து! (ரொம்ப பேராசை தொண்டர்களா இருக்காங்கப்பா!

38 comments:

Anonymous said...

இந்த பட்டிமன்றத்திற்கு முடிவு சொல்லும் பொறுப்பை அண்ணன் லக்கிலுக்காரிடம் ஒப்படைக்கிறேன்.

லக்கிலுக் said...

அண்ணா!

என்னண்ணா இது? இப்படியெல்லாம் அதிர வெச்சீங்கன்னா நாங்களெல்லாம் என்னத்தைண்ணா பண்ணுறது?

நீங்க யாருன்னு கண்டுபுடிச்சிட்டேன் அண்ணாத்தை... :-))))))

Anonymous said...

மு.க.அழகிரி பி.ஏ பட்டதாரி
சென்னை மாநிலக்கல்லூரியில்
பொருளாதாரத்தை சிறப்புப் பாடமாக
எடுத்து, தமிழ்வழியில் பயின்று
பட்டம் பெற்றவர்

சூரியன் - தி பாஸ் said...

வீராசாமி! ஆட்டோமெடிக்கா லக்கி கிட்ட போயிடும் இந்த பதிவு!

சூரியன் - தி பாஸ் said...

லக்கி! வாங்க ச்சும்மா ஊலூலூதான், யாவாரம் ஆவது வச்சி மேல எழுதலாமான்னு பார்க்கலாம்!

Anonymous said...

போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.

இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.

அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.

போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.

போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.

ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.

போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.

சூரியன் - தி பாஸ் said...

நடுநிலைன்னா நடுநிலை தான்! நான் தான் தப்பு! இல்ல இது ஸ்லிப்பு!

வெட்டிப்பயல் said...

இதுவரை இந்த மாதிரி சிந்தித்ததேயில்லை... அடுத்து என்ன எழுத போறீங்கனு பார்க்கலாம் :-)

சூரியன் - தி பாஸ் said...

வாங்க வெட்டிபையா! நன்றி!

குசும்பன் said...

லக்கி நாங்களும் கண்டு புடிச்சிட்டோம்ல
இது யாருன்னு??

கலக்குங்க

சூரியன் - தி பாஸ் said...

வாங்க குசும்பன்! நன்றி!

Subramanian said...

தகுதியைப் பொறுத்துத் தான் தலைமைப் பொறுப்பு கிடைக்கும் என்றால் கலைஞரை விட ஆயிரமாயிரம் மடங்கு தகுதியுள்ளோர் பலர் தி.மு.க.வில் இருந்தனர்,இருக்கின்றனர்.ஆனால் யதார்த்த நிலை அப்படி இல்லையே!கலைஞரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் தி.மு.க.வின் ஒட்டு மொத்த அழிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.கர்ணனுடன் கொடை போனது போல் கலைஞருடன் கட்சி போய் விடும்.

எதுக்கும் ஜகா வாங்காதவன் said...

ஏம்பா கனிமொழிக்கு உதவியா இன்று டில்லி
வரை சென்று அனைத்து தலைவர்களை சந்திக்கும்

கலைஞரின் மூண்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள்
கட்சி நடத்த சரியான ஆள்.

Nakkiran said...

Good interesting points..

Anonymous said...

;((

Anonymous said...

//தனக்கு மத்திய மந்திரி பதவி கிடைத்ததும் தன்னை விட மூத்த அமைச்சரான TR பாலு, இராசா போன்றவர்களை சுலபமாக பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு அலட்சியமாக வந்து அமர்ந்தார். //

இப்போதான் first bench லேர்ந்து last bench க்கு போய்ட்டாரே!

படிப்பெல்லாம் ஒரு திமுக தலைவரின் தகுதி என்று சொன்னால் பேராசிரியர்
அன்பழகன் போன்றவர்கள்தானே தலைவராகி இருக்கணும்! கலைஞர் எப்படி
தலைவரானார்? படிப்புக்கும் தலைவராவதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.

Anonymous said...

//
கலைஞரின் மூண்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள்
கட்சி நடத்த சரியான ஆள்.
//

உண்மைல கேக்கும்போதே நெஞ்ச வலிக்கிதுங்க

சென்ஷி said...

//நீங்க யாருன்னு கண்டுபுடிச்சிட்டேன் அண்ணாத்தை... :-)))))) //

ME TOO

:))


SENSHE

கதிரவன் said...

அட !!
அடுத்து என்ன எழுதறீங்கன்னு பாப்போம் :-)

TBCD said...

வரட்டுமே..அது என்ன..கலைஞரின் குடும்ப சொத்தா.. அன்னா இருக்கும் பொதே.அடுத்த வாரிசு அடையாளம் காடியது போல் இப்போ கலைஞ்சர் செஞ்சா நல்லா இருக்கும்.. நாம எல்லாம், பதிவு போட நிறைய விடயம் கிடைக்கும்.. இவங்களால மக்களுக்கு ( பதிவர்களும் மக்களே.. ஹி!ஹி!) ஆகும் ஒரு நன்மை..!!

Anonymous said...

{:-{)

bala said...

சூரியன் தி பாஸ் அய்யா,

என்னைக்கேட்டா ராசாத்தி அம்மாளை கலைஞரின் அரசியல் வாரிசா அறிவிக்கலாம்;பெண்ணியம் போற்றும் திராவிடம் என்கிற பேரும் கிடைக்கும்;மேலும் திராவிட சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டு வாடும் வைப்பாட்டிகளில் ஒருவருக்கு அதிகாரம் கொடுக்கபட்ட புண்ணியமும் கழகத்துக்கு கிடைக்கும்.என்ன சொல்றீங்க?

பாலா

சூரியன் - தி பாஸ் said...

திண்டுக்கல் சர்தார்! நீங்க நினைப்பதுபோல் நாங்க விட்டுட மாட்டோம்! பகல் கனவு வேண்டாம். பிரச்சனைன்னு வந்துட்டா நாங்க ஒன்னு கூடிப்போம். இதோ மயிலாடுதுறை சிவா இந்த பதிவுக்கு எதிரா பதிவு போட்டிருக்கார், ஆனா அவர் கருத்து. எனக்கும் தளபதி மேல் எந்த விரோதமும் இல்லை. அவர்தான் தலைவர் எனில் எனக்கும் சம்மதமே!

சூரியன் - தி பாஸ் said...

அனானி ஐயா! கலைஞர் படிக்கவில்லைதான் ஆனா அவரே ஒரு பாட புத்தகம்! அதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்!

சூரியன் - தி பாஸ் said...

பின்னூட்ட பாலா அவர்களே! இது எங்களுக்குள் நடக்கும் சுய அறுவை சிகிச்சை, நீங்க மூக்கை நுழைக்கவேண்டாம்!

bala said...

//பின்னூட்ட பாலா அவர்களே! இது எங்களுக்குள் நடக்கும் சுய அறுவை சிகிச்சை, நீங்க மூக்கை நுழைக்கவேண்டாம்//

சூரியன் தி பாஸ் அய்யா,

தப்பா சொலல்றீங்களே.கழகம் தமிழின் சொத்து,ஏன் உலகத்துக்கே பொதுவான சொத்துன்னு சொல்லலாம்.இதுல யார் வேணா மூக்கை மட்டுமல்ல எதை வேணுமாலும் நுழைக்கலாம்.

பாலா

சூரியன் - தி பாஸ் said...

பாலா! நாங்கள் இருப்பதே அறுவை சிகிச்சை கூடம், எல்லாரிடமும் கத்தி இருக்கிறது. நீங்கள் எதை வேண்டுமானாலும் நுழைக்கவும் அறுபட போவது உருதி!

bala said...

சூரியன் தி பாஸ் அய்யா,
பாத்துங்க.லக்கி,சிவா,நீங்க எல்லாமே நுழைச்சிருக்கீங்க.எல்லாரும் அறு பட்டு நிக்கப்போறீங்க.வேண்டாமே இந்த அறுவை சிகிச்சை விளையாட்டு.அதுசரி கழகத்துக்கு ஏன் அறுவை சிகிச்சை நடக்குது?கான்ஸர் வந்து விட்டதா?

பாலா

bala said...

சூரியன் தி பாஸ் அய்யா,
எனக்கு ஒரு அருமையான ரோசனை தோணுதங்கய்யா.நம்ம தமிழினத்தலைவி,பராசக்தி,புரட்சி தலைவி அம்மா,தி மு கவே தமிழ்நாட்டை பாதித்துள்ள கேன்ஸ்ர்னு சொல்லியிருக்காங்க.லக்கியா நீங்க அறுவை சிகிச்சை நிபுணர்களெல்லாம் ஒண்ணா கூடியிருக்கீங்க.நீங்க எல்லாம் ஏன் இந்த கழகத்தையே வெட்டி எறிந்து தமிழ்நாட்டையும்,தமிழர்களையும் காப்பாத்தக்கூடாது?

பாலா

Anonymous said...

சூரியன் த பாஸ் அய்யா, நாங்களெல்லாம் சொம்பு தூக்கும் இனம் அய்யா. நாளைக்கே தயாநிதி அய்யா முதல்வராக வந்தால் அவருக்கும் எங்கள் இன சோ ராமசாமியும், இந்து ராமும் சொம்பு தூக்குவோம் அய்யா. காலம் காலமாக சொம்பு தூக்கியே பிழைத்து வருகிறோம் அய்யா. எங்கள் பிழைப்பில் மண்ணை போட்டு விடாதீர்கள் அய்யா.

உலகத்திலேயே சொம்பு தூக்கி உயர்ந்த இனம் எங்கள் இனம் தான் அய்யா.

Anonymous said...

அடேய் பாலா மடையா!

எத்தனை வாட்டி காறி உமிழ்ந்தாலும் நீயும் உன் இனமும் திருந்தவே மாட்டீங்களா? சொம்பு தூக்கி உயர்ந்ததை இவ்வளவு உயர்வாக பேசுகிறாயே? தூ.. இதெல்லாம் ஒரு பிழைப்பா?

வற்றாத சொம்பும், சுருட்டாத பாயும் வைத்து தானே திராவிடர்களை மயக்குகிறீர்கள்? எம்.ஜி.ஆரை வளைத்து போட்டது அப்படித்தானே?

எங்கள் தயாநிதியும் சரி, தளபதி ஸ்டாலினும் சரி. உங்களுடைய மாய்மால சொம்பு வேலைகளுக்கெல்லாம் மயங்கிவிட மாட்டார்கள். பொது எதிரி யாரென்று புரிந்து தான் வைத்திருக்கிறோம்.

உன் சொம்பு தூக்கும் வேலையை எல்லாம் இனிமேல் அமெரிக்கா காரனிடம் வைத்துகொள். திராவிடனிடம் வைத்துகொள்ளாதே.

bala said...

//எங்கள் தயாநிதியும் சரி, தளபதி ஸ்டாலினும் சரி. உங்களுடைய மாய்மால சொம்பு வேலைகளுக்கெல்லாம் மயங்கிவிட மாட்டார்கள். பொது எதிரி யாரென்று புரிந்து தான் வைத்திருக்கிறோம்.//

சொம்பு நக்கி அய்யா,

யாரைச் சொல்றீங்கம் எதிரின்னு?புரட்சி தலைவியையா?மரம் வெட்டியையா?கேப்டனையா?இன்னொரு தடவை சொம்பை நக்கி விட்டு சொல்லுங்கய்யா.

பாலா

Anonymous said...

சொம்பு நக்கி அய்யா, மேலே பாலா என்ற பெயரில் பின்னூட்டம் போட்டிருப்பவன் எவனோ கேப்மாரி அய்யா. நான் தான் ஒரிஜினல் பூணூல் போட்ட ஐ.எஸ்.ஓ. 9001 சான்றிதழ் பெற்ற பாலா அய்யா. எனக்கும் மட்டுமல்ல, எங்கள் இனத்துக்கே சூடு சொரணை இல்லை அய்யா. மாடு மேய்த்து கொண்டு ஊடுருவிய கும்பல் தானே அய்யா நாங்கள். எங்களுக்கு எதுக்கு சூடு சொரணை?

Anonymous said...

சொம்பு நக்கி அய்யா, மேலே பாலா என்ற பெயரில் பின்னூட்டம் போட்டிருப்பவன் எவனோ கேப்மாரி அய்யா. நான் தான் ஒரிஜினல் பூணூல் போட்ட ஐ.எஸ்.ஓ. 9001 சான்றிதழ் பெற்ற பாலா அய்யா. எனக்கும் மட்டுமல்ல, எங்கள் இனத்துக்கே சூடு சொரணை இல்லை அய்யா. மாடு மேய்த்து கொண்டு ஊடுருவிய கும்பல் தானே அய்யா நாங்கள். எங்களுக்கு எதுக்கு சூடு சொரணை?

Anonymous said...

இங்கேயும் அந்த குடுமிபய பாலா விளையாட்டு தானா? திருந்துங்கடா டேய்.

Anonymous said...

சூரியன் தி பாஸ் அய்யா,

அப்பப்பா ஆபரேஷன் தியேட்டர்னு கூட பாக்காம ஆரிய பாக்டீரியா குஞ்சுகள் ரொம்பவே சத்தம் போட்டுவிட்டன.போகட்டும்.ஆபரேஷன் முடிந்து பார்ப்பனீயம் என்னும் கேன்ஸர் அறுத்து எறியப்பட்டதா?பேஷன்ட் அதான் பார்ப்ஸ் எப்படி இருக்காங்க? பிழைச்சுக்குவாங்களா?அதுசரி சல்மாஅயூப், போண்டா, அரைகுண்டன் எல்லாருமே அறுவை சிகிச்சை நிபுணர்கள் தானா? நம்ம கிண்டியில 'ஆல்கா' சொம்பு அடிக்கிறவர் மொட்டை சோவை பாஸ் என்று கூறிக்கொண்டு சொம்பு அடித்து உண்டகட்டி தின்றவர் என்பதைத் தவிர வேறு என்ன நிபுணத்துவம் பெற்றவர்?மத்தபடி யார் யாருக்கு என்ன என்ன சமாசரங்கள் அறுத்து எறியப்பட்டது என்ற விஷயங்களையும் ஒரு எட்டு போட்டு சுவாரஸியமா சொல்லுங்களேன். எனக்கு குடுமியும், வேறு ஒரு சமாசாரமும் மட்டுமே அறுத்து எரியப்பட்டது என்பதையும் சொல்லிவிடுகிறேன். ஒரு திகில் கதை படிச்சு ரொம்பவே நாள் ஆயிட்டுது.

Anonymous said...

படிப்புதான் தகுதி என்றால் ஏன் ஒரு கூட்டமே காமராஜர்
ஆட்சி அமைப்போம்னு சொல்லுது?

எம்ஜிஆர், ஜெயலலிதா, இந்திராகாந்தி இவர்களை விட
படித்தவர்கள் அந்த கட்சிகளில் இல்லையா?

Agathiyan John Benedict said...

"மு.க முத்து ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்க்கு உதாரணம்" - நல்ல நகைச்சுவையாக இருந்தது.